Wednesday, March 3, 2010
ஆன்மீக சந்தையின் நுணுக்கங்களின் அறியாமையில் போலிச் சாமியார்கள்.
ஊடகங்களாலும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாக சில காலமாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் ஆன்மீகமும், கலையும், காமமும், ஆட்சியும் சமயம் சார்ந்ததாகவே இருந்தது,
இதற்கு அடையாளமாக கஜுராகோ கோயில் சிற்பங்களும், வாத்சாயனர் எழுதிய காமசூத்ரா நூலும்,தமிழகத்தை பொறுத்தவரை சீவகசிந்தாமனியும், ஆண்டாளின் திருப்பாவையும் சமயமும்
பாலியலும் இரண்டும் கலந்த ஒன்றாகவே இருந்தது,
மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அரசியலிலிருந்து மதத்தை தனியாக
பிரித்துவைக்கவேண்டிய சூழல் எழுந்தது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சார பண்பாடு .
சமயக்கூறுகளை அடக்கிய மக்கள் தொகையை ஒரு குடையின் கீழ் ஆள்வதற்கான ஒரு
தந்திரமாகவே அரசியலிலிருந்து சமயம் பிரிக்கப்பட்டது.சமயச்சார்பின்மை என்பது தேசத்தை
ஒரு குடையின் கீழ் கட்டி ஆள்வதற்கான அரசியல் தந்திரமாக மாறியது.
அரசியலிலிருந்ஃது சமயத்தை பிரித்துபோல் சமயத்திலிருந்து கலைகளையும் பிரித்தனர் சமய
குருக்கள்.அப்போது பாலியலும் சமயத்திலிருந்து பிரித்து ஒதுக்கிவைக்கப்பட்டது.அதிகாரம் என்பது
ஒரு குவிமையத்திலிருந்து பல கிளைகளாக பிரிக்கப்பட்டது.
சமயம் தனியாக பிரிந்ததும் காவிவேட்டி உடுத்தியவன் எல்லாம் சாமியார்கள் என்று மக்களால்
பார்க்கப்பட்டனர்.இந்திய சுதந்திரத்துக்குப் பின் பல்வேறுபட்ட சாமியார்கள் தோன்ற ஆரம்பித்தனர்.
உதாரணமாக ரஜனீஷ் முதல் ஜே. கிருஷ்ணமூர்த்தி வரை சொல்ல்லாம். இந்த இருவருமே
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாகவும் இந்து பக்தி இலக்கியங்களை மனப்பாடமாக
சொல்பவர்களாகவும் இருந்தனர். பல சாமியார்களும் இது சாமியார்களுக்கான தகுதியாக இன்றுவரை மக்களால் பார்க்கப்படுகிறது.
ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களைவிட அதிலிருந்து கிளைத்த ப்ராட்டஸ்தாந்து சமய பாதிரிகள் தூக்கத்தில் கூட பைபிளின் முழு வசனங்களை மனப்பாடமாக ஒப்புவித்த தால் ப்ராட்டஸ்தாந்து மதத்துக்கு பக்தர்கள் திரண்டுவந்ததை இன்று கண்கூடாக பார்க்கிறோம்.
ரஜினீசும் கிருஷ்ணமூர்தியும் மனப்பாடம் நுனிநாக்கு ஆங்கிலம் தவிர பேச்சாற்றல் உள்ளவர்களாகவும் இருந்தனர்.அத்தோடு இருவருமே உலக அளவில் தங்களின் கருத்துக்களை எடுத்துச்சென்றனர்.
ரஜினீஷை பொறுத்தவரை நிர்வாண ஆசிரமம் என்ற கவர்ச்சிகரமான ஒரு சொல்லாடல் இருந்து வந்தாலும் அதற்கு ஒரு உலகத்தரம் இருந்த தால் அது உலக சந்தையில் ஒரு காட்சிப் பொருளாகவும் சந்தைப் பொருளாகவும் மாறியதால்தான் போலிச்சாமியார் என்ற முத்திரை அவர்மேல் விழாமல் இருந்த்து.
ஆனால் அண்மைக்காலம் வரை போலிச்சாமியார்கள் என்று பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் குற்றம் சாட்டப்படும் சாமியார்கள் எல்லோருமே ரஜினீஷ் போன்ற சாமியார்களின் சந்தை நுட்பத்தில் தங்களை இணைக்கத்தவறியதுதான் இவர்களை குற்றவாளிகளாக மக்கள் பார்ப்பதற்கு இட்டுச்செல்கிறது.
பாலியல் என்பதற்கு நம் சமூகம் பல்வேறு தடைகளை கலாச்சார ரீதியாக விதித்திருந்தாலும் பாலியல் குறித்த சுதந்திரங்களை ஊடகமானது பூடகமான முறையில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஊடகம் என்பது ஒரு ப்ளூ ப்லிமையோ அல்லது விரசமான காட்சிகளையோ ஒளிபரப்ப முடியாது. ஆனால் அதைப்போன்றதொரு விசயம்தான் ஊடகங்களின் சந்தைபோன்ற உணர்சிகரமான செய்திகள் இல்லையேல் ஊடக்த்தின் வரவேற்பும் மக்களிடையே இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு முறையும் ஒரு சாமியாரின் காம களியாட்ட காட்சிகள் ஒளிபரப்படும்போதெல்லாம் மீடியாக்களுக்கு அவை தீனியாக போய்விடுகிறது.
சாமியார்கள் மாட்டும்போதெல்லாம் சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் காவல்முறைக்ஃகும் வேல வந்துவிடும். இலையேல் வடிவேல் சொல்வது மாதிரி யார்மே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துர என்றமாதிரி ஆகிவிடும். பிறகு இந்த மாதிரி நிறுவனங்களை மூடிவிடவேண்டியதுதான்.
சாமியார்கள் சொத்துசேர்ப்பது தவறில்லை, (பங்காரு சாமியார்) சாமியார்கள் அதிகார மையங்களாக(சந்திராசாமி) செயல்படுவது தவறில்லை. ஆனால் செக்ஸ் விஷயத்தில் வரும்போதுமட்டும் ஏன் அவை குற்றமாக பார்க்கப்படுகிறது. சாமியார்கள் என்றாலே பிரம்மச்சரியம் புலனடக்கம் ஆன்மீகம் ஞானம் வாக்குசுத்தம் வழிகாட்டிகள் என்று சமயம் சார்ந்த கருத்துக்களை சாமியார்கள் சாதுக்களிடம் எதிர்ப்பார்பதால் அதற்கு எதிரானதாக கருதப்படும் செக்ஸ் என்பது குற்றமாக பார்க்கப்படுகிறது.
அதிகாரப் பரவலாக தேசம் ஆனபின் ஒன்றுடன் ஒன்று கலந்து ஊடாடுவதி என்பதும் தேசக்குற்றமாக ஆகிவிட்டது. அது தேசத்தை பிளவுபடுத்திவிடும் என்பதால்தான் சாமியார்களின் பாலியல் நடவடிக்கை எனபது குற்றமாக இன்றைய கட்டத்தில் பார்க்கப்படுகிறது.
ஒரு அரசியல்வாதியோ ( என் டி திவாரி) ஒரு பிரமுகரோ ஒரு தனிமனிதனோ பாலியல் குற்றச்சாட்டுகளில் முத்தரை குத்தப்படும்போது அது ஒழுக்க்ககேடான விசயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சாமியார் விருப்ப ப்பட்ட பெண்களுடன் சல்லாபம் புரிந்தாலே அது தண்டனைக்கரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.பலருமே ஏதோ ஒரு வகையில் இந்த ஆன்மீக சந்தையை புரிந்து கொள்ளாதவர்களாகவே இருப்பது அவர்களின் திரதிஷ்டமே.
அண்னாயில் நித்யானந்த சாமியாரின் காம லீலைகளை பல ஊடகங்கள் வெளிப்படுத்தியபோது சாமியாருடன் உல்லாசமாக இருந்த நடிகையின் முகம் மாத்திரம் கிராபிக்ஸ்கொண்டு மறைக்கப்பட்டிருந்த்து. யார் அந்த நடிகை என்று மக்கள் கேட்க ஆரம்பித்தனர். இதேபோல் குற்றம்சாட்டப்படும் எல்லா சாமியார்களுடனும் ஏதோ ஒரு வகையில் பெண்கள்(அதாவது பக்தர்கள்) சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களையும் தண்டிக்கவேண்டும் என்று சிலர் நினைப்பது அதிகார மட்டத்தில் நடக்கமுடியாத காரியம் . பக்தர்கள் என்பவர்கள் தனிமனிதர்கள். ஆனால் சாமியார்கள் எனும் ஒரு அடையாளம் என்பது தேசத்தின் ஒரு அதிகார கண்ணிகளில் ஒரு கண்ணி. இந்த கண்ணிக்கு பிரச்சனை ஏற்படும்போது மற்ற கண்ணிகளுக்கும் பிரச்சனை ஏற்படும் ஆன்மீக சந்தையை புரிந்தகொண்டால் சாமியார்களின் காமகளியாட்டங்கள்கூட சாதாரணமாகிப்போய்விடும்.
Monday, March 1, 2010
சுல்தான் தி கிரேட்
இன்றைய காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு பூடகமான வெளியில் இயங்குவதாக மாறிக்கொண்டிருக்கிறது. ஸ்தூலமான அரசியலில் செயல்படுபவர்கள் மிகச் சிலரே என்றாகிவிட்டது. யாரும் வெளிப்படையாக செயல்படவோ கருத்துச்சொல்லவோ பயப்படுகிறார்கள்.
பூடகமாக இருந்து செயல்படும் பட்சத்தில்தான் தங்கள் சொந்த அரசியலை சாத்தியமாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இதற்கு தமிழக அரசியலில் அண்மைக்காலமாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நகர்வுகள் முக்கியமாகப்படுகிறது. தனது சொந்த விறுப்பு வெறுப்புகளையே இவர் அரசியல் தளத்தில் உதிர்த்தும் காட்சியாக்கியும் வருவது சிந்திக்கத்தக்கது.
தமிழக அரசியலைப் பொறத்த அளவில் கலைத்துறை அதுவும் சினிமா என்பது ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு துறை.
எம்ஜியார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அரசியல் பிரவேசம் செய்து ஆட்சியமைத்து ஆண்டுகொண்டிருந்த பல ஆண்டுகளுக்கு பின்தான் அவரது தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் ஒரு பிம்பமாக உலாவந்தன.காந்தியின் மூக்குக்கண்ணாடியும் கைத்தடியும் பொதுப்புத்தியில் காட்சியாக பிம்பமாக வந்த்துபோல் இந்த தொப்பியையும் கண்ணாடியையும் எடுத்துக்கொள்ளலாம்.அதன்பிறகு எம்ஜியாரின் இரட்டைஇலைச்சின்னத்துக்கு எப்படி மவுசு வந்த்தென்றும் அது தமிழக அரசியலில் முக்கிய பிம்பமாக மாறி அரசியல் செய்த தையும் நாம் அ
றிவோம்.
ஆனால் ஒரு வரலாற்றுக்கு நிகழ்வுக்குப்பின் அந்த வரலாற்றின் முக்கியமான சில அடையாளங்கள் பிம்பமாக மாறி அரசியலாகும் கவர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் காலவதியான வரலாற்றையும் நாம் பல்வேறு தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ரஜினியின் பல்வேறு பிம்பங்கள் ஒருகட்டத்துக்கு மேல் எடுபடாமல் போய்விட்டது. பாபா முத்திரை வரைக்கும் ஆங்கிலபடரேஞ்சுக்கு போனாலும் படமும் தோல்வியடைந்த து.
எம்ஜியாரின் தொப்பி கிளாசுக்கு நிகராகவும் நிற்கமுடியவில்லை.எம்ஜியாரின் பிம்பங்கள் அவரது நீண்ட கால கட்ட கலை மற்றும் அரசியல் பங்கேற்புக்குப்பின் வந்தவை. ஆனால் ரஜினியின் நகர்வுகள் பிம்பங்களை முதலில் உற்பத்தி செய்துவிட்டு அதை அரசியலாக்கும் தன்னையில் உருவானவை.
காந்தி எம்ஜியார் போன்றவர்களிலிருந்து பிறந்த பிம்பங்கள் அவர்களின் நீண்ட வாழ்க்கைக்கு பின்பு பொதுதளங்களில் இயங்கியஙைழ இது அவர்களால் ஏற்பட்டவை அல்ல. ஆனால் பாபா வரை பல பிம்பங்களை உற்பத்தி செய்ய முயன்ற ரஜினி அது அரசியலாகும் தன்மை இல்லாது போகவே அடுத்த கட்ட முயற்சிக்கான அடையாளம்தான் அவர் தயாரிக்கும் சுல்தான் தி கிரேட் திரைப்படம்.
வாழ்க்கையிலிருந்து திரைப்படங்களிலிருந்து கருத்துக்களிலிருந்து பிம்பங்கள் உருவாக்கப்படுவதற்கு நேர்மாறான செயல்தான் இந்த அனிமேஷன் திரைப்படம்.
சிலைக்கு பதிலாக இந்த அனிமேஷன் பிம்பங்கள்.பிம்பமாகவோ சிலையாகவோ முடியாத சூழ்நிலையில் அனிமேஷன் படங்களாக பிறகு ஸிடிக்கர்கள் என்று பிம்பங்கள் வினியோகம் சாதாரண சந்தைவரை வந்துவிடக்கூடும். ஒருகாலத்தில் திரைப்படங்களின் பெயரைவைத்து நக்மா சாரி குஷெபு பிளவுஸ் இன்னொரு நடிகையின் கொண்டை அந்த நடிகையின் பாவாடை என்று திணிக்கடைகள் பலவும் வியாபாரத்தில் பணம் பார்த்தன. ரஜினியின் இந்த சுல்தான் படமும் ரஜினி என்ற விற்கப்படாத முடியாத பிம்பங்களை விற்று காசாக்குவதற்கான முயற்சியே..நுகர்வு கலாச்சார சந்தையில் ரஜினியின் பிம்பத்தை நவீன ஸிடிக்கர் சிலைகளாக மாற்றி நுகர்வோரின் வாங்கும்சக்தியை சோதித்துப்பார்ப்பதே இதன் நோக்கம். ஏமாந்தால் இன்னும் ரஜினி ஸிடிக்கர்களுக்கான படங்கள் வரும்.
இதற்கான அதாவது முழு நீ. அனிமேஷன் படமான சுல்தானுக்கான முன்னோட்டம்தான் பாதி அனிமேஷனும் பாதி நிஜ ரஜினியும் தோன்றப்போகும் எந்திரன் படம்.
எந்திரனின் முன்னால் பெயர் ரோபோ. இயந்திரங்களின் கண்டரோல் மக்களிடம் இருக்கவேண்டும். இல்லையேல் நீங்கள் இயந்திரங்களாக மாறிவிடவேண்டியதிதான்.